ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் இருக்கும்

ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் இருக்கும்
  • :

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேலையில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 75 மி.மீ. க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில், காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் இருக்கும். இதன் காரணமாக, இன்று (06) பிற்பகல் 12:12 மணிக்கு களுத்துறை, கெலிங்கந்த, கஹவத்த, பொக்குனுதென்ன மற்றும் மஹவெலதொட்ட ஆகிய  பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் .


Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]