இரண்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள்

இரண்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள்
  • :
தற்போது நிலவும் கனமழை நிலவரங்களுக்கு ஏற்ப, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தனது நிலச்சரிவு எச்சரிக்கைகளைப் புதுப்பித்துள்ளது.

 இந்த அறிவிப்பு இன்று (22) காலை 6.00 மணி முதல் நாளை (23) மாலை 6.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி, கேகாலை மாவட்டத்தில் உள்ள தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள இரத்தினபுர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை “வெளியேறுங்கள்” (சிவப்பு) நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சீத்தாவக்க மற்றும் பதுக்க, கம்பஹா மாவட்டத்தில் உள்ள அத்தனகல்ல, களுத்துறை மாவட்டத்தில் உள்ள இங்கிரிய மற்றும் புலத்சிங்க, கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல மற்றும் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள பெல்மதுல்ல, குருவிட்ட மற்றும் அயகம ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை “கவனமாக இருங்கள்” (மஞ்சள்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை "கவனமாக இருங்கள்" (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles