நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை’ ஒன்றை அமைப்பதற்குத் தயாராகியுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வித் துறையில் தொழில் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் எனும் கல்விச் சபையை அமைக்கும் அடிப்படை நோக்கம் என்றும் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு த் திட்டமிடப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்பில் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய, சிறந்த இயலுமைமிக்க மற்றும் வளமானவர்களை உருவாக்குவது அவசியமாகும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தேசிய கல்விக் கல்லூரியில் மீகொடயில் அமைந்துள்ள கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டில் கல்வி நிருவாக சேவையில் இணைந்து கொண்ட அதிகாரிகளின் தரம் ஒன்று முதல் விசேட தரம் வரை பதவி உயர்த்துதலுடன் சம்பந்தப்பட்ட திறன் அபிவிருத்தி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.