மாத்தறை டிப்போவிற்கு சொந்தமான 06 பேருந்துகளைப் புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் பணி நேற்று (08) மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கமமெத்தகே தலைமையில் நடைபெற்றது.
மாத்தறை டிப்போவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து டிப்போவை கட்டியெழுப்புவதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்து, மிகவும் வினைத்திறனான பொது போக்குவரத்து சேவையை வழங்குவதற்குத் தேவையான பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


