மீள் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் மற்றும் குழந்தைகளுக்கு உணவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் போத்தல்களுக்கு இலங்கை தரநிலைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு 2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்துடன், அனைத்து உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்தகர்கள் இதற்கு கட்டுப்பட வேண்டும். இதனை அமுலாக்கிய திகதியின் பின்னர், குறித்த உத்தரவை மீறுவது பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.


