நாகதீபம் புராண ரஜ மகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடின மகோற்சவம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெறுகிறது

நாகதீபம் புராண ரஜ மகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடின மகோற்சவம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெறுகிறது
  • :
யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையில் வருடாந்த கடின புண்ணிய மகோற்சவம் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் ஈடுபாட்டுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.

 அதன்படி, நாகதீபம் புராண ரஜ மகா விஹாரையின் தலைமை விகாராதிபதியும், வட இலங்கையின் தலைமை சங்கநாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய நவடகல பதுமகித்தி திஸ்ஸ தேரரின் வழிகாட்டுதலின் கீழும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழும், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவின் மேற்பார்வையின் கீழும், வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீபம் புராண ரஜ மகா விஹாரையில் வருடாந்திர கடின புண்ய மகோற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டது.

 
இந்தக் கடின புண்ய மகோற்சவத்தை ஆரம்பித்து, 2025 அக்டோபர் 10 ஆம் திகதி நயினாதீவில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து, வடக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட வண்ணமயமான ஊர்வலத்தில், கடின அங்கி, பிரித் ஓதுதல்களுக்கு மத்தியில் மக்களின் வழிபாட்டிற்காக நயினாதீவைச் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னர் கடற்படைத் தளத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், அன்று மாலை கடற்படையின் பங்கேற்புடன் நாகதீபம் ரஜ மகா விஹாரையில் பௌத்த சடங்குகள் செய்யப்பட்டன.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி காலை, நயினாதீவில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து கடின அங்கியை நாகதீபம் விகாரைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அங்கு கடின அங்கி பூஜை செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மதியம் கடற்படைத் தளபதியின் தலைமையில் மதிப்பிற்குரிய மகா சங்கத்தினருக்கு அன்னதானம் மற்றும் பிரிகர வழங்கப்பட்டது.

Related Articles