ஓய்வு பெறும் கடற்படை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் முன்னேற்றத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்

ஓய்வு பெறும் கடற்படை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் முன்னேற்றத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்
  • :

ஓய்வு பெறவுள்ள இலங்கை கடற்படை (SLN) பணியாளர்களுக்கு கப்பல் மற்றும் கடல்சார் துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று (22 ஏப்ரல்) கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கெளரவ ஜனித ருவன் கொடித்துவக்கு இணைந்து தலைமையில் நடைபெற்றது.

இவ்விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட முன்னைய கலந்துரையாடலை தொடர்ந்து எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, ஓய்வு பெறும் கடற்படை பணியாளர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதிகளைப் பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட செயல்முறையை உருவாக்குவது தொடர்பாக முன்னேற்றங்கள் பரிசீலிக்கப்பட்டன. உலகளாவிய கடல்சார் துறையில் இணைவதற்குத் தேவையான திறன் சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் இரு பிரதி அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

மேலும், இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடல்சார் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எளிமைப்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் ஆராயப்பட்டன. சர்வதேச கடல்சார் தரநிலைகளுக்கு ஏற்ப திறன் சான்றிதழ்களைப் பெற ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உதவும் நிலையான வடிவமைப்பை விரைவாக உருவாக்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கடற்படை தளபதி, வணிகக் கப்பல் போக்குவரத்து பொது பணிப்பாளர் (DGMS), மற்றும் மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) உட்பட, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் வணிகக் கப்பல் செயலகம் (MSS) சார்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles