எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாகவும், அதனால் மே மாதம் முதலாவது பாராளுமன்றக் கூட்டம் சம்பந்தப்பட்ட வாரத்திற்கான பாராளுமன்றம் மே மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மாத்திரம் நடாத்துவதற்கு நேற்று (21) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.