டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Edirisinghe Edible Oil (Pvt) Ltd இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
குறித்த காசோலையை Edirisinghe Edible Oil (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் வினிதா ஜயசிங்க மற்றும் பணிப்பாளர் சுஹான் ஜயசிங்க ஆகியோர் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினர்.


