திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு.
  • :
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது இன்று (26) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன மத நல்லுணர்வை மேம்படுத்தும் நோக்கிலேயே இஸ்லாமிய மக்களால் கடைப்பிடிக்கும் இப்தார் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஸம்ஸம் கிணறு பற்றிய ஆச்சரியமான தகவல்கள் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.
நோன்பின் விஞ்ஞான ரீதியான விளக்கம், நோன்பின் மகத்துவம் மற்றும்  சிறப்புத்தன்மை பற்றி  இதன்போது எடுத்து கூறப்பட்டது. மேலும் பாடல் மற்றும் நாடக நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன. இதன்போது நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]