ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பானது.
02) திட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த குடும்பங்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் அதிக ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக, தங்கள் தீர்மானங்களை இன்னும் வழங்கவில்லை என்று பதிவாகியுள்ளது.
03) இதுவரை தங்களது பயனாளர் தீர்மானத்தை அறிவிக்காத குடும்பங்கள், அந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான இறுதி திகதியாக 2026.06.15 ஐக் கருத வேண்டும்.
04) 2026.06.15 ஆம் திகதிக்குப் பின்னர் பயனாளர் தீர்மானத்தை அறிவிக்கும் குடும்பங்கள் முழுமையான வீட்டு வசதி இழப்பீட்டின் பொருட்டு அல்லது மீள்குடியேற்றம் பொருட்டு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பது தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தயவுடன் அறியத்தருவதாக அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது


