வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு
  • :

2025 ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 

 

2025 ஏப்ரல் 13ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது 

 

மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலையில் மழை பெய்யலாம். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் போது, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14-ம் திகதி வரை இலங்கையை அண்மித்து காணப்படும் மத்திய தரைக் கோட்டின் உச்சத்தில் காணப்படும். இன்று (13) நண்பகல் 12:11 மணிக்கு துணுக்காய், ஓலுமடு, ஒட்டு சுட்டான், குமுலமுனை, மற்றும் செம்மாலை போன்ற பிரதேசங்களின் மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

 

 

 

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]