மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்

மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்
  • :

2025 ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணி வரை தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை செயலிழக்கச் செய்யுமாறு நாடு முழுவதும், கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களைப் பயன்படுத்துபவர்களிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

மேலும், நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

எனவே, இந்த முக்கியமான காலகட்டத்தில் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிக்க, கூரை சூரிய மின் சக்தி அமைப்பை பயன்படுத்துவோரிடம் தமது ஒத்துழைப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]