2024 ம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளின் 2025 ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளுக்குரிய முதல் சுற்றுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பெறுபேறுகளை நிகழ்நிலை மூலமாக (online) http://g6application.moe.gov.lk எனும் இணைப்பினூடாக பார்வையிட முடியும், மேன்முறையீட்டினூடாக பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்கும் பணிகள் உரிய பாடசாலை அதிபர்களால் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: