2025 மே மாதம் 31 திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மே மாதம் 31 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட - மத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை சில நேரங்களில் பெய்யலாம்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வட - மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது பயணிக்கும் காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். தீவின் சில இடங்களில் அவ்வப்போது பயணிக்கும் காற்று மணிக்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்றாக ஏற்யனபடக் கூடும்.
இடியுடன் கூடிய மழை காரணமாக ஏற்படக் கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது