திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தின் அறநாயக்க பிரதேச செயலாளர் பிரிவில் அம்பலகண்ட பிரதேசத்தை மேற்பார்வை செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா அண்மையில் (24) மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
எதிர்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக கிடைக்கப்பெறும் ஒதுக்கீட்டின் கீழ் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான துறைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக இந்த மேற்பார்வை சுற்றுப்பயணத்தில் ஆசியா அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஈடுபட்டார்.


