நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்கள் இன்று (22) முதல் ஆரம்பம்

நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்கள் இன்று (22) முதல் ஆரம்பம்
  • :

மில்கோ (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஹைலெண்ட் உற்பத்திகளை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (22) கமனல கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்ச கே.டி லால் காந்த தலைமையில் நடைபெற்றது . 

 
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோத்தாபய உரையாற்றுகையில், 
 
500 ஹைலண்ட் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் இத்திட்டத்தின் மூலம் எமது உற்பத்திகளை ஒரே இடத்தில் கொள்வனவு செய்வதற்கு முடிவதுடன், திறிபோஷ, சீனிக் கம்பனியின் உற்பத்திகள், மசாலா உற்பத்தி சார்ந்த கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகள் போன்ற உயர்தரத்திலான உற்பத்திகளை சாதாரண விலைக்கு கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
 
 
இதன் போது விற்பனை நிலையங்களின்  பொறுப்புக்களாக; தேவைக்கேற்ப பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்திய ஹைலேண்ட் நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோத்தாபய, இந்த விற்பனை நிலையங்கள் மூலம் பால் மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திகளை பற்றாக்குறை இன்றி கொள்வனவு செய்வதற்கும் உள்நாட்டு உற்பத்திகளை பரவலாக்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
 
இதன் போது உரையாற்றிய அமைச்சர் கே டி லால் காந்த ; 
 
“விற்பனை செய்வதற்காக காணப்பட்ட நிறுவனமான மில்கோ நிறுவனம் கடந்த அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க அமுல் கம்பனி உடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்க பாட்டுக்கு அமைவாக கை கால்களை நீட்டி வேலை செய்வது கடினமான நிலையில் காணப்பட்டது.
 
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையிடம் 32 பண்ணைகள் காணப்படுகின்றன. பாரிய அரச  தந்திரோபாய சிக்கலை இல்லாதொழிக்கும் விதத்தில் தேசத்தின் அவசியத்திற்காக செயல்படுவதற்கு நாம் தயார்.
 
இந்த வருடத்தினுள் 500 விற்பனை நிலையங்களை உருவாக்கும் செயற்பாடு  தீவிரமான ஒரு பணியாகும். தற்போது 180 விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. அதன்படி இந்த வருடத்தினுள் 500 விற்பனை நிலையங்களை அதிகரிப்பது பாரிய அபிவிருத்தியாகும். திட்டம் அரச துறையில் உற்பத்திகள் பலவற்றை ஒருங்கிணைத்ததாக  ஏற்படும் விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றை உருவாக்குவது விசேடமானதாகும்.
 
 
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை பற்றி கூறுவதாயின், அது பொருளாதார ஜனநாயகம் ஒன்றாகும். இதற்கு முன்னர் பொருளாதார பணம் வைத்திருக்கும் சில நபர்களின் கைகளில் மாத்திரமே காணப்பட்டது. பொருளாதார ஜனநாயகம் எனும் அடிப்படையின் கீழ் ஒவ்வொருவரும் பொருளாதார செயற்பாட்டுடன் தொடர்புபட முடியும். அதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதார செயற்பாடுகளுடன் தொடர்புபடும் அனைவருக்கும் தமது பிரதிபலன் சரியாக கிட்ட வேண்டும். அனைவருக்கும் சாதாரண பங்கு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்த நிறுவனங்கள் எதையும் பராமரிக்க முடியாது என அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார். 
 
 
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; 
 
பால் உற்பத்தியாளர்களுக்கு சரியான சாதாரண பங்கு கிடைக்க வேண்டும் என்பது போல் வாடிக்கையாளர்களுக்கும் அதன் சாதாரண தத்துவம் கிடைக்க வேண்டும். பட்டதாரிகளும் கேட்பது எமக்கு பொருளாதாரத்துடன் சம்பந்தப்படுவதற்கு வாய்ப்பு தருமாறு தான். தொழில் ஒன்றை கேட்பதன் அர்த்தம் இதுதான். ஒவ்வொருவரையும் நாட்டின் பொருளாதாரத்துடன் இணைத்துக் கொள்வது தான் எமது நோக்கம். 500 சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்காக இது சிறந்த வழிமுறையொன்றாகும். பொருளாதார நல்லிணக்கத்திற்காக பொருளாதார ஜனநாயகம் அவசியம். 
 
தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையிடம் காணப்படும் காணிகள் தூரியான் உற்பத்திக்காக கோரப்பட்டன. மலேசியாவிற்கு தூரியான் அனுப்புவதற்கு 500 ஏக்கர் கோரப்பட்டது. ஏனெனில் வெளிநாட்டு செல்லாவணியை உழைப்பதாகக் காரணமாக கூறப்பட்டது. ஆனால் எமது அமைச்சின் அடிப்படை எமது மக்களின் உணவு பாதுகாப்பிற்காக உணவுகளை உற்பத்தி செய்வதாகும். அதற்காக வழங்கப்பட வேண்டிய காணி வேறு நோக்கங்களுக்காக எம்மால் வழங்கப்பட மாட்டாது.  அரச பொருளாதார செயற்பாடுகளில் சுதந்திரம் காணப்பட வேண்டும் என்ற கொள்கை  புதிய லிபரல் வாதம் பற்றி அண்மையில் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த மனப்பாங்கு.
 
கல்கிரி போத்தல் ஒன்றை குடிப்பதற்கு இன்றும் நாம் தேடுகிறோம். அவ்வாறான உற்பத்திகளை நஞ்சு அற்ற உற்பத்திகளாக சந்தேகம் இன்றி பயன்படுத்த முடியும்.  புரியல வாதத்தின் பெயரில் சகல நஞ்சு உற்பத்திகளும் இதன் படியே சந்தைக்கு வந்தன. தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபை, மில்கோ போன்ற நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டமை இந்த புதிய லிபரல் வாதம் தான். அப்படியாயின் அரசாங்கம் பொருளாதாரத்திலிருந்து நீங்கியமை தான். 
 
சகல அரச நிறுவனங்களும் வீழ்ச்சி அடைந்ததன் பிரதி பலனாக அரசு சேவை வீழ்ந்தது. முன்னொரு காலத்தில் அரச நிறுவனங்களில் தொழில் புரிவது என்றால் பாரிய வரவேற்பு காணப்பட்டது. ஆனால் தற்போது அரசாங்க ஊழியர்களை பார்ப்த்ததும் திருடர்கள் என்ற மனப்பாங்கு ஏற்படும். முழு நாடும் இரண்டு துறைகளினால் தான் வீழ்ச்சி அடைந்தது. முதலாவது அரசியல் இரண்டாவது அரச சேவை. 
 
கொள்கை ரீதியாக நாம் சிந்தித்தோம். இவை இரண்டையும் செய்யாமல் திருத்தாமல் நாட்டை சரி செய்ய முடியாது. நாம் நாட்டின் மறுமலர்ச்சி யுகத்தில் உள்ளோம்.  அரசியல் மறுமலர்ச்சியும் நன்றாக செய்ததாக நாம் நம்புகிறோம். திருட்டு,இலஞ்சம், ஊழல், ஆகியவற்றை நூற்றுக்கு நூறு வீதம் நிறுத்தி உள்ளோம். மாகாண சபை பொறிமுறையை உருவாக்குவதன் ஊடாக திருட்டு இலஞ்சம் மற்றும் ஊழலை நூற்றுக்கு நூறு வீதம் முடிவுக்குக் கொண்டு வர முடியும் முடியும்.
 
அரச சபையில் சம்பளம் குறைவாயின் சம்பளத்தை அதிகரிக்க முடியும். அதற்காக தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்க முடியும் . அவ்வாறானவற்றிற்கு தொழிற்சங்கங்கள் ரீதியாக நாமும் உதவி செய்வோம்.”
 
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் டி பி விக்கிரமசிங்க, மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோதாபய உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | editor@news.lk