அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின தலைமையில் நேற்று (2025.10.10) தியகமயில் ஆரம்பமானது.
நாட்டில் உள்ள 1,170 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, 525 போட்டி பிரிவுகளில் இந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. நாட்டின் பாடசாலை விளையாட்டு துறையில் முன்னணி விளையாட்டுப் போட்டி இதுவாகும்.
விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண உரையை நிகழ்த்திய பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை செனவிரத்ன; விளையாட்டு மாத்திரம் அன்றி பிள்ளையின் ஆளுமையை தீர்மானிக்கும் இயலுமை மற்றும் குழுவாக செயல்படும் மனப்பான்மையை வளர்ப்பதற்காக பாடசாலைகளில் விளையாட்டு உதவி அளிக்கின்றது என தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்; விளையாட்டின் முக்கியத்துவம் அறிந்த அரசாங்கம் ஒன்றாக விளையாட்டு வீரர் ஒருவரின் ஆரம்ப முதல் தேசிய மட்டம் வரை வீரர்களை ஊக்குவிக்கும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக, விசேட சந்தர்ப்பம் காணப்படும் பிள்ளைகளுக்கு விளையாட்டின் உணர்வை வழங்கக்கூடிய திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் அவசியமும் அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உதார திக்கும்புர, கல்வி அமைச்சின் விளையாட்டு பணிப்பாளர் ஜி ஜி அனுர அபேவிக்ரம உட்பட வலயப் பணிப்பாளர்கள்,உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வலயப் பணிப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


