நேற்று (24) பிற்பகல் 4.00 மணி முதல் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட்டு தீர்மானிக்கப்பட்டபடி கடைகளுக்காக சமூகமளிப்பதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்ததாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தபால் தொழிற்சங்கம் மற்றும் அமைச்சர் இடையே நேற்று (24) நடைபெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய தகவல் பரிமாற்றத்தின் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள் என இரு பிரிவுகளும் கைவிரல் அடையாளம் இட்டு இன்று(25) முதல் செயல்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
வேலை நிறுத்தத்தினால் ஆறு நாட்கள் ஏற்பட்ட இழப்புகள் காணப்படுகின்றன. குவிந்த கடிதங்கள் மற்றும் பொதிகள் பாரிய தொகை மலைபோல் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும்.
தொழிற்சங்கங்களுக்கு சம்பந்தப்பட்ட சகலரும் வருகை தந்து இவற்றை முடிந்தவரை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


