மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று (22) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறுகிறது.
தொழில் அமைச்சின் கீழ் உள்ள மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று (22) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், யாழ்ப்பாண மாவட்டத்தை உள்ளடக்கிய வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து, இளைஞர்கள் வேலை தேடுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதாகும்.
இதனூடாக, 30 தனியார் நிறுவனங்கள் மற்றும் 14 பயிற்சி நிறுவனங்களை இணைத்து வேலை தேடுபவர்களுக்கு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் வேலை தேடுபவர்கள் மற்றும் பயிற்சி தேடுபவர்களை, அன்றைய தினம் ஆன்லைன் ஊடாக திணைக்களத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும்.
இந்த வேலை தேடும் திட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் வேலைவாய்ப்பு தேடுபவர்கள், தொழில் வழிகாட்டல் தேவைப்படுபவர்கள், தொழில்முனைவோராக வளர விரும்புபவர்கள் மற்றும் பயிற்சி தேவைப்படுபவர்கள் என குழுக்களாக வகைப்படுத்தி எதிர்கால திட்டங்களைத் தயாரிக்கவும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச தொழிலாளர் சந்தையில் புதிய போக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் அமைச்சு


