பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (11) நிறைவடைகிறது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (11) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையானது, தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமலில் இருக்கும்.
அதன்படி, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது