இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், டாக்டர். சத்யஞ்சல் பாண்டே, 2026 ஏப்ரல் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்ட தனது உத்தியோகபூர்வ பயணத்தின் போது, திருகோணமலையில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டங்களால் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் ஆகியவற்றிற்கும் கவனம் செலுத்தப்படும் என்று பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கும், உலகில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த, எதிர்காலத்தில் பெரிய அளவிலான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வளர்ப்பதில் இந்தச் சந்திப்பு ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.


