இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று (16) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று (16) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்சேயை சந்தித்தார். கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
நாட்டில் நிலவும் மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) பாதுகாப்பு அமைச்சில் சிரேஷ்ட சிவில் பாதுகாப்புத் திணைக்கள (CSD) அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) உயர்மட்டக் தூத்துக்குழு, பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது. இச்சந்தின் போது அமெரிக்க தூதரக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.
எதிர்வரும் பெரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான கலஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழிலாளர் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம் இன்று (17) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் தலைமையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid Hamoud Nasser Alkahtani மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினருமானJosé Ignacio Sánchez Amor அவர்கள் ஜனவரி 16ம் திகதி பிரதமர் அலுவலக்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வை சந்தித்தனர்.
அரசாங்கத்தின் அடிப்படை இலக்கு, முதல் இரு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என பிரதமர் இதன்போது தெரிவித்தார். இந்த சந்திப்பில் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
குறித்த சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் Carmen Moreno, இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்துவ பிரதானி Sánchez Amor உள்ளிட்ட அதிகாரிகளும், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று (17) சீனாவின் செங்டூவில் உள்ள இலத்திரனியல் உற்பத்தித் தொழிற்சாலைகள் சிலவற்றை பார்வையிடவுள்ளார்.
அதன்பின், வறுமை ஒழிப்புக்கான முன்மாதிரிக் கிராமத்தை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களை (Wang Xiaohui)சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் தேசிய விஞ்ஞான மற்றும் விவசாய, தொழில்நுட்ப நிலையத்தையும் பார்வையிடவுள்ளார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இதில் இணைந்துகொள்வர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
17-01-2025
இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று (16) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
ஜனாதிபதியின் சீன மாகாண சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாள் பாரிய 3.7 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டை நாட்டுக்கு ஒப்படைத்து வெற்றிகரமாக நிறைவு பெற்றது
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]