கொழும்பு நகர்ப்புற புகையிரத வீதிப் புனரமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் மாளிகாவத்த லொக்கோ சந்தியிலிருந்து பாதுக்க புகையிரத நிலையம் வரைக்குமான புகையிரதப் பாதை ஒதுக்கிடங்களில் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களுக்கான வீடுகளை வழங்கி அல்லது நட்டஈடு வழங்கி மீள்குடியமர்த்துவதற்காக 2024.08.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


