All Stories

நாட்டிற்கு தொடர்ச்சியாக  தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை

நாட்டிற்கு தொடர்ச்சியாக  தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு தொடர்ச்சியாக  தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் புலம்பெயரும் தொழிலாளர் சமூகத்திற்கு, தரமான பயிற்சியை வழங்குவது குறித்து தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (2025.01.20) விடுமுறை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (2025.01.20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் ஆலோசனைக்கு இணங்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் இன்று (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் 2025.01.25 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (2025.01.20) விடுமுறை

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும்

கலாஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

கலா ஓயா ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கலா ஓயா நீர்மட்டம் வெள்ள எச்சரிக்கையை நெருங்கியுள்ளது. மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது 17000 கன அடி வேகத்தில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நீர்த் தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவுக்கு இணங்க எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டியேற்படலாம்.
 
இந்நிலை காரணமாக ஆற்றுப்படைகையை அண்மித்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு மற்றும் கதுருவலகஸ்வெவ போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
கலாஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்