All Stories

56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் சுவிட்சர்லாந்து பயணம்

சுவிட்சர்லாந்தின்(Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF): 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, 2026 ஜனவரி 19ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

"A Spirit of Dialogue" (உரையாடல் மனப்பாங்கு) எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் - 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு
2026.01.19

56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் சுவிட்சர்லாந்து பயணம்

புத்தளம் ஸாஹிரா வித்தியாலயத்தின் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது 

"தரவு, கொள்கை மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்தை வழங்குதல் எமது நோக்கமாகும். அரசியல் தேவை அல்லது ஏனைய எந்த ஒன்றும் எமக்கு முக்கியமானது அல்ல; எமக்கு பிள்ளைகள் தான் நோக்கம்" என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புத்தளம் ஸாஹிரா வித்தியாலயத்தின் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது 

இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும் இணைந்து கொண்டனர்

இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும் இணைந்துகொண்டனர்

 

பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 28வது மாநாடு (CSPOC) இந்தியாவின் கௌரவ பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் 2026.01.15 ஆம் திகதி புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சம்விதான் சதன் மண்டபத்தில் ஆரம்பமானது.  

இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன  உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும் இணைந்து கொண்டனர்

ஸ்ரீ தலதா மாலிகையின் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான 50வது திட்டமான “ஆரோக்கிய” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது

நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்த இந்த ஆண்டு 250 “ஆரோக்கிய” சுகாதார மையங்கள் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டின் இலவச சுகாதாரத் துறையில் முக்கிய சவால் தொற்றாத நோய்கள் ஆகும், மேலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் சிறந்த தீர்வு நாட்டின் செயல்பாட்டு ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதாகும், இதற்காக, தற்போதைய திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு 250 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். 

ஸ்ரீ தலதா மாலிகையின் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான 50வது திட்டமான “ஆரோக்கிய” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது