ஜனாதிபதியின் உரையின் தொடர்ச்சி;
கடந்த வருட இறுதியில் எமக்கு நாடென்ற வகையில் பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது. அந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்கையில் நாடு எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் படிப்படியாக பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் தாம் சார்ந்த துறைகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்டனர்.


