நச்சுப் போதைப் பொருளை இல்லாது ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் "முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத் திட்டத்தின் வடமாகாண நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம் பிரதீபன் தெரிவித்தார்.
முழு நாடும் ஒன்றாக என்ற தேசிய வேலைத்திட்டம் நாளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நாளை (16) பிற்பகல் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்தும் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், எதிர்கால சிறுவர்களையும் இளைஞர்களையும் ஆரோக்கியமான சமுதாயமாக மீட்டெடுக்கும் வேலைத்திட்டமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக வேலை திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இந்த நச்சுப் போதை பொருளை உற்சாக ஆட்சி போதைப்பொருள் பாவனையற்ற மாவட்டமாக உருவாக்குவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்தார்.