‘‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் களுத்துறையின் கனன்வில மற்றும் ஹீனடியங்கலவில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), இம்மாதம் 24 ஆம் திகதி முதல்இ, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான புதிய வளாகத்தில்இ புது பொலிவு மற்றும் விசாலமான வசதிகளுடன் தியத்தலாவ அரச மருந்தகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி, தியத்தலாவ, யஹலபெத்த சாலை முகவரியில் அரச மருந்தகம் நிறுவப்படவுள்ளது.
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் கோவிலன் பகுதிக்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2026 ஜனவரி 20 அன்று இரவு, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் ஏழு (07) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
40 ஆண்டுகளுக்குப் பின்னர் 1985 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் நடந்த யுத்தத்தினால் மூடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலையைப் புனரமைப்பதற்காக நேற்று (22) பரந்தன் இரசாயன கைத்தொழில் வலயத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும்.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேல் மாகாண சபை மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து ஏற்பாடு செய்யும் "சலாம் றமழான் 2026" கலாச்சார விழா, எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொழும்பில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு (Northern Investment Summit 2026 (NIS26) நேற்று (21.01.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார நிலையத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் ஆரம்பமானது.
இன்றைய பாராளுமன்றம்
⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00;
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
⏰ மு.ப. 10.00 - மு.ப. 11.00;
வாய்மூல விடைக்கான வினாக்கள்
⏰ மு.ப. 11.00 - மு.ப. 11.30;
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
⏰ மு.ப. 11.30 – பி.ப. 5.30;
ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
🔗 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/ta/business-of-parliament/order-papers
---
📺
**********
இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் செய்தித்தளம்
👉 Website ---> https://tamil.news.lk/news
👉 facebook ---> https://www.facebook.com/profile.php?id=61559593114097
👉 WhatsApp Group ----> https://chat.whatsapp.com/JZ7efW0aPc7JWlen3AiDns (தமிழ் செய்திகள்)
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜனவரி 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு முதல் வடக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2026 ஜனவரி 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜனவரி 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை நாளையிலிருந்து (23ஆம் திகதி) மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


