டிசம்பர் முதல் மே வரையிலான வருடாந்த புனித பயணத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், உடுவப் பெளர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பமானது. இரத்தினபுரி, கல்பொத்தவல சிவனொளிபாதமலை ரஜ மகா விஹாரையில் புனித தாது மற்றும் சுமன சமன் சிலை பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளுடன் இவ்வருட நிகழ்வு ஆரம்பமானது.
