All Stories

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களுக்கு 226 மில்லியன் ரூபா நிவாரணம்; கைத்தொழிலை இரண்டு மடங்காக மேம்படுத்த அரசாங்கத்திடமிருந்து துரித திட்டம்

திட்வா (Ditwah) மற்றும் வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 226 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான நிதி நிவாரணங்களை வழங்கும் அரச நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் ​நேற்று (23) நாரஹேன்பிட்டியில் உள்ள கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மீனவர்களுக்கு நிதி உதவிக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களுக்கு 226 மில்லியன் ரூபா நிவாரணம்; கைத்தொழிலை இரண்டு மடங்காக மேம்படுத்த அரசாங்கத்திடமிருந்து துரித திட்டம்

யாழில் சர்வதேச வர்த்தகச் சந்தை 2026 ஆரம்பம்

16 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் (23.01.2026) முற்றவெளி மைதானத்தில் காலை 10.30 மணியளவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழில் சர்வதேச வர்த்தகச் சந்தை 2026 ஆரம்பம்

இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
 
இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் (21) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பெல்ஜியத்தின் இலங்கைக்கான ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ் (Mr. Koenraad Pringiers) கௌரவ விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத நட்புறவுச் சங்கத்தின் சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பத்மசிறி பண்டார மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் இணைப் பொருளாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இதன்போது, இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர். அத்துடன், பாராளுமன்ற ஈடுபாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை வலியுறுத்தி, பொதுவான நலன் சார்ந்த பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
 
இக்கூட்டத்திற்கு முன்னர், பெல்ஜியத்தின் ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன், இதன்போது இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மாதமாகும்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 12 கோல்போஸ்கோப்புகள் (Colposcope), 12 மாவட்டங்களில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மாதமாகும்