இப்பாகமுவ வீர கேணல் நியோமால் பலீபான கல்லூரி மற்றும் குளியாப்பிட்டி தாவல்ல தம்மாலோக மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (01) கிடைத்தது.

இப்பாகமுவ வீர கேணல் நியோமால் பலீபான கல்லூரி மற்றும் குளியாப்பிட்டி தாவல்ல தம்மாலோக மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (01) கிடைத்தது.
மெஹெவர பியச கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சில பிரிவுகள் சிமந்த்ரா கட்டட வளாகத்திற்கு இடமாற்றம் செய்யும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹெமசந்திரா தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
அதன்படி 11 பிரிவுகள் தலைமை அலுவலகத்திற்கு அருகில் உள்ள பத்தரமுல்ல, கனஹேன, இல. 465 என்ற (சிமந்திரா கட்டடத்தில்) நிறுவப்பட்டது.
அவ்வாறே நிறுவப்பட்ட பிரிவுகள்;
1.நலன்புரிப் பிரிவு
2.ஒருங்கிணைப்புப பிரிவு
3.வெளிநாட்டு உறவுகள் II பிரிவு
4. வணிக சிக்கல்களை தீர்க்கும் பிரிவு
5.நிறுவன மற்றும் தொழில் பயிற்சிப் பிரிவு
6.ஆய்வு பிரிவு
7.சந்தைப்படுத்தல் பிரிவு
8.பிரதி பொது முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
9.சிரேஷ்ட முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
10.IM Japan பிரிவு
அதன்படி இன்று (01) முதல் மேற்படி பிரிவுகளின் சேவைகள் புதிய இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ரெமி லம்பேர்ட், நேற்று (ஜூலை 31) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி, மல்வத்து ஆகிய இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த ஏழு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊழல் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சந்தேக நபர்களுக்கு 1994 இலட்சம் ரூபாய்களுக்கும் அதிகமான நிதி மீண்டும் அறவிடப்பட்டு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2025 ஓகஸ்ட் 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஓகஸ்ட் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
🔷
தற்காளிக பெண்கள் காப்பு மத்திய நிலையமொன்று அண்மையில் (29) நுவரலியாவில் திறந்து வைக்கப்பட்டது.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உட்பட சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (30) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
மாலைதீவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.
கடந்த 28 ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார்.
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் (Dr. Mohamed Muizzu) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுடனும் மாலைதீவு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரச பிரதானிகளுடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களையும் நடத்தினார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பனவும் பரிமாறப்பட்டன.
குரும்பா மோல்டீவ்ஸ்” விடுதியில் ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு விசேட இராப்போசன விருந்துபசாரம் அளித்தார்.
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் மாலேயில் உள்ள சுல்தான் கார்டனில் ஜனாதிபதி மரக்கன்றொன்றை நட்டார்.
மேலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வணிக மன்றத்திலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்தித்து ஜனாதிபதி உரையாற்றினார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 60 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கை, மக்களுக்கு இடையிலான நெருக்கமான உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு வலியுறுத்தினார்.
அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்தனர்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள் on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த விசாக்கள் வழங்குவது 2025 ஜூலை 29 முதல் அமுலுக்கு வருவதோடு, இந்த விசாக்களைப் பெறுவதற்கு, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருத்தல் மற்றும் மாலைதீவில் தங்கியிருக்கும் காலத்தில் தமது செலவுகளை ஈடுகட்ட போதுமான பணம் தங்களிடம் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.
மாலைதீவு குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசா வசதி வழங்கல் ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் மாலைதீவின் குடிவரவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த விசா வசதி வழங்கப்படுகிறது என்று மாலைதீவு அரசாங்கம் தெரிவிக்கிறது. இதன் ஊடாக தமது அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் உயர் முன்னுரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று மாலைதீவு அரசாங்கம் மேலும் தெரிவிக்கிறது.
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (23) கூடியது.
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவு -ஜனாதிபதி மரக்கன்றொன்றை நட்டார்


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]