1000 அஞ்சல் உதவியாளர்களை நிரந்தர சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1000 அஞ்சல் உதவியாளர்களை நிரந்தர சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (29.07.2025) இடம்பெற்றது.
ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் 2025 ஜூலை 23 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்றுமுன்தினம் (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
உலகின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றான (IDEF 2025) என்ற 17வது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி, துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன், துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்டு, துருக்கி ஆயுதப்படைகளினால் (TAFF) ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஜூலை 25 ஆம் திகதி, பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர் கௌரவ டஷோ கர்மா ஹமு டோர்ஜி, (கொழும்பைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் கௌரவ சேர்ஜி விக்டோரோவ், (புதுடில்லியைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் கௌரவ யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் கௌரவ அலம் வோல்டெமரியம், மற்றும் (இஸ்லாமாபாத்தைச் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் கௌரவ அலிஷர் துக்தயேவ் ஆகியோருடன் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.
கொழும்பு, 2025 ஜூலை 23 – சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வத்தளை, பள்ளியவத்தையிலிருந்து சுமார் 02 கடல் மைல் (04 கிலோமீட்டர்) தொலைவில் மேற்கு கடலில் ஏற்பட்ட சீரரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த மூன்று (03) மீனவர்கள், 2025 ஜூலை 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அதனை டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வந்து மேலும் பதப்படுத்துவதற்காக மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டனர்.
அமெரிக்க கேட்ஸ் அறக்கட்டளையின் (Bill & Melinda Gates Foundation) உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையேயான சந்திப்பு ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் கலாநிதி கிறிஸ் எலாயஸ், இது தனது இலங்கைக்கான முதல் விஜயம் என்றும், பாராளுமன்றத்தில் இந்த முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்பு விடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
கலாநிதி எலாயஸ் மேலும் கூறுகையில், கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும், இந்நாட்டின் சிறுவர்களினதும் பெண்களினதும் ஊட்டச்சத்துத் தேவைகளை மேம்படுத்துதல், விவசாயத் துறையை மேம்படுத்துவதில் புதிய டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சாத்தியப்பாட்டைப் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தாய்மார்களினதும், குழந்தைகளினதும் ஊட்டச்சத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதிலும், அதன் மூலம் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க விசேட கவனத்துடன் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டியதோடு, பிராந்தியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுப்பதில் அறக்கட்டளையின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடினார்.
சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாடசாலைகளில் மதிய உணவு வழங்குதல் தொடர்பான அரசாங்க திட்டங்கள் குறித்து கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்திய பிரதமர், இந்த நாட்டின் சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கேட்ஸ் அறக்கட்டளையினால் வழங்கக்கூடிய உச்சக்கட்ட ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் புதிய கல்வி முறையில் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக கற்பித்தல், கற்றல், மதிப்பீடு மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்டிருக்கும் டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பிரதமர், கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார்.
அத்தோடு, டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகளுக்கும், 2026 இல் ஆரம்பிக்கவிருக்கும் உத்தேச கல்விச் சீர்திருத்தத்திற்கும் கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவையும் பங்களிப்பினையும் பெற்றுத் தருவதின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இதன்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், கல்விச் சீர்திருத்தம் மற்றும் பணிக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒத்துழைப்பினை வழங்கக்கூடிய தரப்புகளின் பங்களிப்பினைப் பெற்றுத் தருவதாக பிரதமருக்கு உறுதியளித்தனர்.
இந்த விசேட சந்திப்பில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதன்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, கேட்ஸ் அறக்கட்டளையின் கொள்கை மற்றும் அரச தொடர்பாடலுக்கான பிராந்திய பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், கேட்ஸ் அறக்கட்டளையின் பணிப்பாளரும் நிகழ்ச்சித் திட்ட ஆலோசகருமான திருமதி அர்ச்சனா வியாஸ் மற்றும் அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
2025 ஜூலை மாதம் 12ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]