அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான நிலையியற் கட்டளையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் அண்மையில் (26) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
கொழும்பு சங்கராஜ கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்று (23) நடைபெற்றது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 செப்டம்பர் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
.கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் போது (19) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சேவை நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது.
2025.09.18
கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மருத்துவமனையின் வினைத்திறன் பெரிதும் மேம்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இருதய சிகிச்சை பிரிவின் கட்டட திறப்பு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட இரைப்பை குடல் பிரிவு மற்றும் கல்லீரல் பிரிவு திறப்பு விழா இன்று காலை (18) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை நாங்கள் அறிவோம் என தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க;
முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் வீழ்ச்சியடைந்தது. அத்தகைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, ஒரு நாடு ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில், ஒருவேளை பாதி காலத்திற்குள் அதை மாற்ற எங்கள் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் 2025 வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.
வடமேல் மாகாணத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில் தொடர் நிகழ்ச்சித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.
நிர்மாணக் கைத்தொழில் சார்ந்த தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிர்மாணச் சேவைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள், மின்சார கேபிள்கள் ஏற்றுமதியிலிருந்து பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தத் துறையை ஏற்றுமதித் துறையாக வளர்ப்பதில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், முன்மொழிவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.
அரசாங்க நிர்மாணங்களுக்கு அப்பால் நிர்மாணக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த நாட்டில் நிர்மாணத் துறையில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மை காரணமாக கடந்த காலங்களில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிர்மாணத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க அரசாங்கம் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது நிர்மாணத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து துறைசார் பிரதானிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு , ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், நிர்மாணத்துறை பிரதானிகள் மற்றும் மின்சார கேபிள் உற்பத்தித் துறை பிரதானிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் .
2025 செப்டம்பர் 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
- சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் Healthy Sri Lanka திட்டத்தின் ஆரோக்கிய நடமாடும் மருத்துவ முகாம் பாலிந்தநுவரயில்
- இந்தோனேசியாவின் தூதுவர் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இடையே சந்திப்பு
- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பாக போலியாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் செய்தி குறித்து ஊடக அறிவித்தல்
- இன்றைய வானிலை முன்னறிவிப்பு


