ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொடர்ச்சி 4..
சுற்றுலாத்துறையின் மூலமான வருமானத்தினை 2030 ஆண்டளவில் ஐ.அ. டொலர் 8 பில்லியன்களாகவும், சுற்றுலாப் பயணிகள் வருகைகளை 4 மில்லியன்கள் வரையிலும் அதிகரிப்பதற்கான இலக்கோடு சுற்றுலாத் துறையில் துரிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குள்ள பிரதான சவாலானது பல்வேறுபட்ட பங்குபற்றுனர்களிடத்தில் காணப்படும் ஒருங்கிணைப்பு சிக்கலாகும். இச் சிக்கலினை வெற்றிகொள்வதற்கு உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறனை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


