தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசு நாட்டிற்கு 17 அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது
ஊவபரணகம ஊமா கால்வாயின் அணைக்கட்டு மறுசீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில்..
அனர்த்த நிவாரணம் வழங்குதலுடன் சம்பந்தப்பட்ட புதிய சுற்றுநிருபம்
Ditwah சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன. அனர்த்த நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக, டிசம்பர் 7 முதல் 13 வரையான காலத்திற்குள் இரண்டு அமெரிக்க விமானப்படை C-130J விமானங்கள் 60 Marines படையினருடன் இலங்கைக்கு வந்தடைந்தன.
இந்த சரக்கு விமானங்கள், கட்டுநாயக்க மற்றும் ரத்மலானை விமானப்படை தளங்களிலிருந்து யாழ்ப்பாணம், அனுராதபுரம், திருகோணமலை மற்றும் அம்பாறையில் உள்ள விமானப்படை முகாம்களுக்கு அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேட்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிறப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டன. இதில் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டு, ஒரு விமானம், நேற்று (டிசம்பர் 14) நிவாரணக் குழுவின் ஒரு பகுதியினருடன் நாடு திரும்பியது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ விமான நிலையத்திற்கு வருகை தந்து அரசாங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.
எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மீட்பு சேவைகளுக்காக அமெரிக்காவின் C130 விமானங்கள் இரண்டும் 60 பேர் கொண்ட குழுவினரும் 2025.12.07 முதல் 2025.12.13 வரை எமது நாட்டில் பணியாற்றினர்.
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த பெரிய அளவிலான உற்பத்தித் தொழில்களை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான ஒரு திட்டமான IRFP தொழில் மீட்பு போஸ்டர் திட்டம் மற்றும் அந்தத் தொழில்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமான IDFP தொழில் அபிவிருத்தி போஸ்டர் திட்டம் குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் சமீபத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களைப் பாராட்டும் நாடு தழுவிய நிகழ்ச்சியின் ஒன்பதாவது கட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 2025 டிசம்பர் 14ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்றது.


