‘டிட்வா’சூறாவளியின் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் இறுதிப்படுத்தல் பணிமனை இன்று (பெப்ரவரி 9) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
• பாராளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும்
திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி நேற்று (09) வர்த்தகம், வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, நேற்று (09) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
'நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின் நுவரெலியா மாவட்ட நிகழ்வு நாளை (11) நுவரெலியா கிரகோரி மைதான வளாகத்தில்; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு 2, மலே வீதியில் உள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீட்டு வளாகத்தின் நீண்டகால குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கள ஆய்வு, நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் தலைமையில் சமீபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
மாவனெல்லை பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை வலயத்திற்கு உட்பட்ட பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக இன்று (09) காலை வருகை தந்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் நேற்று (09) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட (மீன்பிடித் துறைப் பீடம் - Faculty of Fisheries ) காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை நிர்ணயித்து வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிருவாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
2026 பெப்ரவரி 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 பெப்ரவரி 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டில் மலையாக சமூகத்தின் பழுதடைந்த வரிசை வீடுகளை புதுப்பிப்பதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புவசதிகள் அமைச்சினால் எண்ணூற்று இருபத்தி ஐந்து இலட்சத்து அறுபத்து ஆரா.யிரத்து இருபது ரூபாய் பெறுமதியான (825, 66, 020.00 ) கூரைத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
