கடந்த வருடத்தின் பரிமாற்றத்திற்கு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி சென்ற நாட்டில் தபால் சேவையின் போக்குவரத்து வசதிகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக 590 கோடி ரூபாய் பெருமதியான பத்து லொறிகள் மற்றும் 20 வாகனங்கள் நாட்டின் தபால் சபைக்கு வழங்குவதற்கு மற்றும் குறித்த திட்டத்திற்கு ஏற்ப தபால்காரர்களின் சைக்கிள்களுக்காக பொதிப் பெட்டிகளைப் (Bicycle Carriers) பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (12) பிற்பகல் 1.00 மணிக்குத் தபால் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சி - 2026 (World Defense Show - WDS 2026) நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 பெப்ரவரி 12 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
நீர்கொழும்பு சுற்றுலா வலயத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையைத் திறக்கும் நோக்கில், இலங்கை கைவினைப் பொருட்கள் சபையின் (லக்சல) 14வது விற்பனைக் கிளை இன்று (12) நீர்கொழும்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டு என்பது "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும்.
வைத்தியசாலைகளில் மருந்துகளின் தங்கு தடையற்ற விநியோகத்தைப் உறுதிசெய்ய குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது மருந்துகளின் இருப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது மிகவும் முக்கியம் - பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி
யாழ் மாவட்டத்தில் ஆவரங்கால் - தொண்டமானாறு வீதியின் (B33) புனரமைப்புப் பணியின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (11.02.2026) காலை 8.30 மணிக்கு அச்சுவேலி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1990ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தினை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அங்கு கல்வி நடவடிக்கைகள் நேற்று (10) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 96 ஏக்கர் காணியை கைத்தொழில் மற்றும் வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்வதற்கும், அந்தப் பகுதியின் பொருளாதாரத்திற்கு தீவிரமாக பங்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஒரு பொதுவான விளையாட்டு மைதானத்தை நிர்மாணிக்கும் நோக்கில், தெனியாய தொகுதியில் விளையாட்டு ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நீண்டகால கனவை நனவாக்கும் முகமாக, மொரவக்க "மறுமலர்ச்சி விளையாட்டு மைதானத்திற்கான" அடிக்கல் நாட்டி அதன் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் (09) மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தலைமையில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைக்கப்பட்ட 62வது பயிற்சி மையமாக, இளைஞர் விவசாய தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், அண்மையில் (9 ஆம் திகதி) எதிலே, விஜயபுர கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
