All Stories

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டம் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டம் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள்

ஜனாதிபதிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரைவலை மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்

அனைத்து மக்களுக்கும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

 

அனைத்து தரப்பினரும் ஒன்றாக கலந்துரையாடி தீர்வை எட்ட வேண்டும்

 

- ஜனாதிபதி

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

 

ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பில், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு கிலோ பூண்டை ரூபா 135/- விலையில் ஒரு தனியார் தரப்பினருக்கு 54860 கிலோ பூண்டை விற்றதன் மூலம் ரூபா 17,006,600 /- இழப்பினை நிறுவனத்திற்கு ஏற்படுதியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிதல் மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் இரு வர்த்தகர்கள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2026.02.12 அன்று காலை முறையே 9.00 மணி மற்றும் காலை 9.14 மணிக்கு மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது