2025 ஆம் ஆண்டிற்காக இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தால் அடையாளம் காணப்பட்ட 07 புதிய தயாரிப்புகளின் வெளியீடு இன்று (30) காலை 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற உள்ளது.
2025 டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கையின் சுகாதார சேவையில் 62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இணைந்துள்ளனர் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motros Lanka PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
அதற்கான காசோலையை United Motros Lanka PLC இன் பொது முகாமையாளர் ரவீந்திர சிறிவர்தன மற்றும் குழும பிரதான செயற்பாட்டு அதிகாரி சாரக பெரேரா ஆகியோரினால்
அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
ජනාධිපති මාධ්ය අංශය
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025. 12. 29
அண்மையில் இலங்கையைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பின்னவல யானைகள் சரணாலயத்தின் யானைகள் குளிக்கும் மாஓயா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கி, நீர் சேறும் சகதியுமாக மாறியமையினால், அவை யானைகளுக்கு ஆபத்தான கண்ணாடித் தூசிகள் மற்றும் இரும்புத் துண்டுகள் தேங்கி காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை - ஸ்பிரிங் வெலி பிரதேசத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிவடைந்த பாலத்திற்குப் பதிலாக மாற்றுப் பாலமாக பெய்லி பாலத்தை (Bailey Bridge) நிருமாணிக்கும் பணிகள் தற்போது நினைவுக் கூட்டத்தை எட்டியுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான (RDA) இந்த வீதி, பிரதேசத்தில் மக்களின் அன்றாடத் தேவைக்காக தோட்டத்துறையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மிகவும் முக்கியமான வீதியாகும். பாலம் பாதிக்கப்பட்டதனால் பொதுப் போக்குவரத்துப் பணிகள் முழுமையாக தடைப்பட்டது.
டிசம்பர் 27 ஆம் திகதி பெய்லி பாலம் அமைக்கப்பட்டுள்ளதுடன் விரைவாக பாலத்தின் சகல பணிகளும் நிறைவுற்று வாகனப் போக்குவரத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்க்கப்படுகிறது
வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஊடாக, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த முறையான ஆய்வும் மதிப்பீடும் அவசியமென வடக்கு மாகாணத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


