All Stories

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டில் அதன் நிதி செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தது.

வருமான வரி மற்றும் திறைசேரி வரி மூலம் அரசாங்கத்திற்கு அளித்த பங்களிப்புகளில் 173 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது.

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டில் அதன் நிதி செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தது.

20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் ஜனாதிபதி தலைமையில் திறந்துவைப்பு

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் ஜனாதிபதி தலைமையில் திறந்துவைப்பு

தேசிய தைப் பொங்கல் விழா அலரி மாளிகையில்...

உழைப்பின் கண்ணியத்திற்கும் இயற்கையிடமிருந்து கிடைத்த பாதுகாப்பிற்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாசார பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய கொண்டாட்டம் இன்று (ஜனவரி 15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

தேசிய தைப் பொங்கல் விழா அலரி மாளிகையில்...

ஜனாதிபதி தலைமையில் மன்னார், Hayleys Fentons Limited 50 மெகாவோட் காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதுடன், பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும். 

 

- வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

ஜனாதிபதி தலைமையில் மன்னார், Hayleys Fentons Limited 50 மெகாவோட் காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம்

இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது

 

                                - வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

 

எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம்

"முழு நாடும் ஒன்றாக" என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கு சகல ஏற்பாடுகளும் தயார் - யாழ் மாவட்ட செயலாளர்

நச்சுப் போதைப் பொருளை இல்லாது ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் "முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத் திட்டத்தின் வடமாகாண நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம் பிரதீபன் தெரிவித்தார். 

முழு நாடும் ஒன்றாக என்ற தேசிய வேலைத்திட்டம் நாளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நாளை (16) பிற்பகல் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

 

தொடர்ந்தும் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், எதிர்கால சிறுவர்களையும் இளைஞர்களையும் ஆரோக்கியமான சமுதாயமாக மீட்டெடுக்கும் வேலைத்திட்டமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக வேலை திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இந்த நச்சுப் போதை பொருளை உற்சாக ஆட்சி  போதைப்பொருள் பாவனையற்ற மாவட்டமாக உருவாக்குவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

 

 

"முழு நாடும் ஒன்றாக" என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கு சகல ஏற்பாடுகளும் தயார் - யாழ் மாவட்ட செயலாளர்