2026 ஆம் ஆண்டில் சலுகை வட்டி விகிதங்களின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு கடன் பொதி செயல்படுத்தப்படும் என்று அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இலங்கை சமூகப் பாதுகாப்பு சபை, 2025 ஆம் ஆண்டில் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய வீட்டுவசதிக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது, அது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் கூறுகிறார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
2026 ஜனவரி 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த பாலத்தை சீர்ச்செய்யும் வரை, பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்கு அம்பன் கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 24, அன்று கடற்படையால் ஒரு சிறப்பு படகு சேவை தொடங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை கடற்படைத் தளபதி 2026 ஜனவரி 10 அன்று கண்காணித்து, இவ் செயல்பாட்டை மிகவும் திறம்பட மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பதுளை கண்டி ரஜ மாவத்தையில், பெயலிஉல் ஒய பாலத்திற்காக நிருமாணிக்கப்பட்ட பெய்லி பாலம் மக்கள் பாவனைக்கு
திட்வாசூறாவளியினால் பாதிக்கப்பட்ட கண்டி - பதுளை ரஜ மாவத்தையில் பெலிஉல் ஒய பாலத்திற்காக நிருமாணிக்கப்பட்ட பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தொஷ் ஜா மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோர் தலைமையில் அண்மையில்(10) மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற திட்வா சூராவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. அந்த இடங்களை மறுசீரமைக்கும் பணிகள் நேற்று (11) மஹவ சந்தி பிரதான புகையிரத நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட அதிகாரிகள் பலரின் பங்புபற்றலுடன் ஆரம்பமானது.
இந்த ரயில் பாதையின் மறுசீரமைப்பு பணிகள், 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்டன, 370 கி.மீ நீளமுள்ள இந்த ரயில் பாதையின் தற்போதைய குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பயண நேரத்தைக் குறைத்தல் மற்றும் வேகம் மணிக்கு 100 கி.மீ ஆக அதிகரித்தல், காட்டு யானைகள் செல்வதற்கான நவீன சமிக்ஞை அமைப்புகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாக இந்த வேலைத்திட்டம் அமைந்துள்ளது.
இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 5 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு மேலதிகமாக, இந்திய போக்குவரத்து சேவைகள், நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களுடன், வடக்கு ரயில் பாதை மற்றும் தலைமன்னார் ரயில் பாதையின் மறுசீரமைப்பு பணிகளை நேற்று (11) ஆரம்பமாகியது.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் நடைபெற உள்ளது.
தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார, 2025 ஆம் ஆண்டுக்காக திறைசேரியால் இலங்கை தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட அதிக வருமானம் ஈட்டுவதில் தபால் துறை வெற்றி பெற்றுள்ளதாகக் தெரிவித்தார்.
டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீள் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் குறித்து தேசிய காட்சி அறிக்கையிடலைத் தயாரிக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவும், Clean Sri Lanka செயலகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அழைப்பு விடுக்கின்றது.
2026 ஜனவரி 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜனவரி 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
