All Stories

ஸ்ரீ தலதா மாலிகையின் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான 50வது திட்டமான “ஆரோக்கிய” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது

நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்த இந்த ஆண்டு 250 “ஆரோக்கிய” சுகாதார மையங்கள் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டின் இலவச சுகாதாரத் துறையில் முக்கிய சவால் தொற்றாத நோய்கள் ஆகும், மேலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் சிறந்த தீர்வு நாட்டின் செயல்பாட்டு ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதாகும், இதற்காக, தற்போதைய திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு 250 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். 

ஸ்ரீ தலதா மாலிகையின் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான 50வது திட்டமான “ஆரோக்கிய” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது

"டித்வா" சூறாவளியால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை

இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை ரயில் சேவைகள் 2026.01.19 முதல் மட்டுப்படுத்தப்படும்.

"டித்வா" சூறாவளியால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2026 ஜனவரி 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மழை நிலைமை: 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

காற்று : 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

கடல் நிலை: 

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2026 ஜனவரி 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 ஜனவரி 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 National Cadet Corps விளையாட்டு விழா இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்

2025 National Cadet Corps விளையாட்டு விழா இன்று (17) மற்றும் நாளை (18) யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா மைதானத்தில் நடைபெறும்

2025 National Cadet Corps விளையாட்டு விழா இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் வட கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இன்று (2026 ஜனவரி 14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற இருநூற்று முப்பத்தேழு (237) பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகையும், மூன்று (03) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் வட கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்