இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த 151வது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் நடைபெற்ற பாலின சமத்துவம் குறித்த கூட்டத்தில் பங்கேற்றது. IPU இன் பாலின கூட்டாண்மைத் திட்டத்தின் (Gender Partnership Programme) கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பாராளுமன்றங்களுக்கிடையே பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதில் உள்ள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பெனின், பூட்டான், புர்கினா பாசோ, சாட், காம்பியா, நமீபியா, சியரா லியோன், இலங்கை, துருக்கி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உள்நாட்டுதொழில்முனைவோருக்கு, உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தை வாய்ப்புக்களை அணுகுவதற்கு மற்றும் உலகலாவிய வர்த்தக வலையமைப்புடன் தொடர்புகொள்வதற்காக வேண்டியும், Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி நாடு பூராகவும் நடாத்தப்படுகிறது.
"போதைப் பழக்கமற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்" என்ற கருப்பொருளுடன் கூடிய "புனர்வாழ்வு முகாம்" 14 நாள் சமூக அடிப்படையிலான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு முகாம் வாரியபொல ஸ்ரீ சுமங்கல பிரிவேனா விகாரையில் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
தபால் சாரதி (திறந்த) பதவியில் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தலைமையில் இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் நியாயமான வர்த்தகப் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) 2025 நவம்பர் 17 முதல் 22 வரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 12 இறக்குமதியாளர்கள் மற்றும் நியாயமான வர்த்தகப் பொருட்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு வர்த்தகப் பிரதிநிதித்துவக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராமியப் பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த
=அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளான இன்று (18) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (103) 92 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
The Management Club (TMC) இன் ஏற்பாட்டில் "Empowering Growth, Insightful Innovations" என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வடக்கு முதலீட்டு உச்சி மாநாட்டை Northern Investment Summit (NIS 2026) முன்னிட்டு இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
