All Stories

சீனாவின் ஹைனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் 

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் சீன சர்வதேச நுகர்வோர் தயாரிப்பு கண்காட்சி 2026 க்கு இலங்கை பிரதிநிதிகளை அழைப்பதற்காக, கொழும்பில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சிற்கும் சீனாவின் ஹைனான் மாகாண மக்கள் கவுன்சிலின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் யான் ஜிஜுனுக்கும் இடையேயான சந்திப்பொன்று அண்மையில் (18) நடைபெற்றது.

சீனாவின் ஹைனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் 

'சமூக சக்தி' தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் கிளிநொச்சி நிகழ்ச்சித் திட்டம்

 
'சமூக சக்தி' வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் அதே வேளை அதனுடன் இணைந்ததாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளை விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித் திட்டத் தொடரின் மற்றொரு கட்டம் நேற்று (18) மற்றும் நேற்று (19) கிளிநொச்சியில் நடைபெறுகிறது.
'சமூக சக்தி' தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் கிளிநொச்சி நிகழ்ச்சித் திட்டம்

தொழில் சட்ட திருத்தத்திற்கு புதிய நான்கு சட்டங்கள் -தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

தொழில் திணைககளத்தின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ், குறிப்பாக 14 தொழிலாளர் சட்டங்கள் 04 பகுதிகளாகப் பிரித்து திருத்தப்பட உள்ளதாகவும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
தொழில் சட்ட திருத்தத்திற்கு புதிய நான்கு சட்டங்கள் -தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் ஜனாதிபதி

 
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் ஜனாதிபதி

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இன்றைய வானிலை அறிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

இதன் காரணமாக, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றைய வானிலை அறிக்கை