All Stories

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, சிறந்த சேவையாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் கௌரவிக்கின்றது

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, சிறந்த சேவையாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் கௌரவிக்கின்றது
சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, சிறந்த சேவையாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் கௌரவிக்கின்றது

யாழ்ப்பாணக் காணி விடுவிப்பு தொடர்பான கூட்டம் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது

 
யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணக் காணி விடுவிப்பு தொடர்பான கூட்டம் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் – 2025 க்கான தேசிய நிகழ்வு நாளை (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் நடைபெறும்

ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் இறப்பார்கள் என்று கருதப்படுகிறது.
உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் – 2025 க்கான தேசிய நிகழ்வு நாளை (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் நடைபெறும்

போதைப் பொருளை ஒழிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மொறட்டுவை மக்கள் பாதுகாப்புக்குழு கூடியது

 
இப்போதைய அரசாங்கத்தின் " முழு நாடும் ஒன்றாக " போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய திட்டத்தின் கீழ் மொறட்டுவை பிரதேச செயலாளர் பிரிவில் போதைப் பொருளை இல்லாது ஒழிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு குழு வின் கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மொறட்டுவை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சட்டத்தரணி, ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் நேற்று (12) மொறட்டுவை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
போதைப் பொருளை ஒழிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மொறட்டுவை மக்கள் பாதுகாப்புக்குழு கூடியது

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, சிறந்த சேவையாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் கௌரவிக்கின்றது

ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, சிறந்த சேவையாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் கௌரவிக்கின்றது

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும்

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும் - உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி
 
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கையைத் தயாரித்து, எதிர்வரும் 13ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.
 
ஒட்டுமொத்த அரச சேவையினையும் மீளாய்வு செய்து அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பு ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தலைமையில் 2025.11.10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
 
இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுவின் தலைவர், இவ்வாறு அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றதாகவும், அதன்போது அவர்களின் சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவான புரிதலைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
 
அதற்கமைய, ஒட்டுமொத்த அரச சேவையிலும் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக மிகவும் முறையான மற்றும் விஞ்ஞான ரீதியிலான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், அவர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்காக சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைகளை மிகவும் நியாயமான முறையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிப்பதாக உப குழுவின் தலைவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜந்த கம்மெத்தகே, (சட்டத்தரணி) கீதா ஹேரத் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும்