தேசிய விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படும் விஞ்ஞான நடைப்பவனி நேற்று (11) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தலைமையில் நடைபெற்றது.
மத்திய ஆசிய கைப்பந்து சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை கைப்பந்து சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய ஆசிய மகளிர் 19 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் இலங்கை இளைஞர் மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் மறுமலர்ச்சி மேம்பாட்டுத் திட்டக் கொள்கை கட்டமைப்பிற்கு இணங்க, தெஹிவளை கவுடான பொது விளையாட்டு மைதானத்தின் மறுசீரமைப்பின் முதல் கட்டம் நேற்று (11) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையில் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த வகையிலும் மேற்கொள்வது பற்றிய சமகால அரசின் கொள்கைக்கமைய, போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு மூலம் வுசயளெவை ஊவைநைள மற்றும் குறித்த வுசயளெவை ஊவைநைள இலிருந்து பிரதான நகரத்திற்கு வினைத்திறனான பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
இந்தியாவின் அமிர்தா மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 50 இலங்கை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தில் கையெழுத்தானது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் கைத்தொழிலாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டு, அக்கறை செலுத்தும் சமூக செயற்பாட்டாளர்களின் சந்திப்பு அண்மையில் கைத்தொழில் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
விஞ்ஞானத்தைப் பிரபலப்படுத்துவதற்கான ஒரு வார கால நிகழ்ச்சித் தொடர் நவம்பர் 10 ஆம் திகதிய உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விஞ்ஞான தினக் கொண்டாட்டம் மற்றும் தேசிய விஞ்ஞான வாரம் நேற்று (10) பத்தரமுல்லையில் உள்ள வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நவம்பர் 9, 2025 ஞாயிற்றுக்கிழமை, சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமானது இலங்கை மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் திரு. முனீர் முளப்பர் மற்றும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் திரு. அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர்கிடையில் கைசாத்திடப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
