All Stories

இலங்கை விமானப்படை CASEVAC நடவடிக்கையின் மூலம் அமைதி காக்கும் படையினர் இருவரை பாதுகாப்பாக காப்பாற்றியது

இலங்கை விமானப்படை CASEVAC நடவடிக்கையின் மூலம் அமைதி காக்கும் படையினர் இருவரை பாதுகாப்பாக காப்பாற்றியது

இலங்கை விமானப்படை CASEVAC நடவடிக்கையின் மூலம் அமைதி காக்கும் படையினர் இருவரை பாதுகாப்பாக காப்பாற்றியது

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அரச மருந்தக வலையமைப்பின் 68வது கிளை கல்முனை நகரில் திறக்கப்படஉள்ளது

மக்களுக்கு நியாயமான விலையில் உரிய மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) கல்முனை கிளை டிசம்பர் 30 ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்படஉள்ளது.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அரச மருந்தக வலையமைப்பின் 68வது கிளை கல்முனை நகரில் திறக்கப்படஉள்ளது

நாட்டின் சுகாதார சேவையில் 62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இணைக்கப்பட உள்ளனர்.

62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள் திங்கட்கிழமை (29) காலை 10.00 மணிக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வழங்கப்பட உள்ளன.

நாட்டின் சுகாதார சேவையில் 62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இணைக்கப்பட உள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 டிசம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு