வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை உச்சத்திற்கு உயர்த்தி, செழிப்பான தென்னை அறுவடையை விருத்தி செய்யவும், சுபீட்சமானதாக மாற்றவும்,

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை உச்சத்திற்கு உயர்த்தி, செழிப்பான தென்னை அறுவடையை விருத்தி செய்யவும், சுபீட்சமானதாக மாற்றவும்,
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ பாய்மரப் போட்டி,திருகோணமலை செண்டி பே இல் 2025 ஆகஸ்ட் 20, முதல் நான்கு (04) நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 ஆகஸ்ட் 23, அன்று வழங்கப்பட்டன.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் புதிய மறுசீரமைப்பில் பாடவிதான மொடியூல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவுள்ள, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் பாதைக்கு திரும்பும் கால அட்டவணைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஊடக சந்திப்பொன்று அண்மையில் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென் மாகாண சுகாதார வீரர்களின் விலைமதிப்பற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் நடாத்தப்பட்ட "தெற்கு சுகாதார வீரர்கள் (தட்சிண சுவ விருவோ) – 2024 " விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (23) காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு நேற்று (23) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்தக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்தோனேசியாவின் இலங்கைக்கான தூதுவர் திவி குஸ்டினா டோபிங் ( Dewi Gustina Tobing ) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணில இடையிலான சந்திப்பு அண்மையில் பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
2025 ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2025 ஓகஸ்ட் 23ஆம் திகதி பிற்பகல் 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றை ஆராய்வதற்கான வாய்ப்பைப் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் தற்போது கொழும்பு பொது நூலக வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள "இது எமது காலம்" என்ற நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்திக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 22 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் சபரகமுவ மாகாண நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (23) முற்பகல் இரத்தினபுரி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]