2025 ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
Clean Sri Lanka கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தித் திட்டத்தின் வட மாகாண திட்டம் நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டது.
துணை மருத்துவ தொழில்களில் (Professions Supplementary to Medicine - PSM) மற்றும் இலங்கை தேசிய வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள பாராமெடிக்கல் கல்லூரிகளில் (Paramedical Schools) பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான உயர் டிப்ளோமா பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது.
தெற்காசிய இளைஞர் தலைவர்கள் முன்னெடுப்பின் (Young South Asian Leaders Initiative – YSALI) பிரதிநிதிகள் குழுவினர் நேற்றையதினம் (19) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். ஒகஸ்ட் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும் தெற்காசிய இளைஞர் தலைவர்கள் பிராந்திய செயலமர்வில் கலந்துகொள்ளும் இக்குழுவில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 பேர் உள்ளடங்கியிருந்தனர்.
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாதுகாப்பு வழங்கப்படுகின்ற சிறுவர்களை சமூகமயப்படுத்தும் போது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இளைஞர் யுவதிகள், அதற்கான முறையான வகையில் தயார்படுத்தும் நோக்கில் நிரந்தரமானதும் பாதுகாப்பானதுமான வீடொன்றை அமைப்பதற்கு இயலுமாகும் வகையில் 01 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய..
• 18 வயது பூர்த்தியடைந்தமையின் அடிப்படையில் கடந்த 10 வருட காலத்தில் (2015.06.30 திகதிக்கு) பின்னர் நிறுவன ரீதியான பாதுகாப்பிலிருந்து விடுபட்டு திருமணமாகியிருக்கின்ற அல்லது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற ஆனாலும் நிரந்தரமான பாதுகாப்பான வீடொன்று இல்லாத இளைஞர் யுவதிகள்
• தகுந்த குடும்பப் பின்னணி அல்லது வாழ்வாதாரம் இன்மையால் தொடர்ந்தும் சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கின்ற 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர் யுவதிகள் (விசேடமாக பெண்கள்)
ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான மீளாய்வும், 2026 ஆம் ஆண்டுக்கான முன்-பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலும் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சேவைக்கு முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையை புதிய மாற்றமொன்றுக்கு உட்படுத்தும் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
சுகாதாரத் துறையில் எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான உபகரணங்கள் கொள்வனவின் போது, ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கும் வகையில் கொள்முதல் வழிகாட்டுதல்களைப் புதுப்பித்தல் குறித்தும், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் மருந்துகள் கொள்வனவின் போது மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
ஊடகத் துறை தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்து புதிய வடிவிற்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கிராமிய பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தின் பள்ளேபோல மற்றும் உக்குவளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள ஐந்து விகாரைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்காக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். அத்துடன், எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள், பிள்ளைகளை தங்கள் பிள்ளைப் பருவத்தை அதே வழியில் கழிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (16) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
‘
AI for Transforming Public Service’ என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பத்து அமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும், அரச சேவை அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் அரச சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இந்த செயலமர்வில் முக்கிய உரை நிகழ்த்தினார். இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க, ஸமிச அபேசிங்க செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.
தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிச்ச, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
இந்திய தூதகரத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகஸ்ட் 19 பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]