All Stories

வட மாகாணத்தில் கைவிடப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை நவீனமயமாக்கி செயல்படுத்த திட்டம்

வட மாகாணத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கூட்டுறவு வியாபாரத்துடன் தொடர்புடைய வியாபார நிறுவனங்களை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆய்வு செய்தார்.

பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பார்வையிட சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ஆய்வு விஐயம்

பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பார்வையிட சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ஆய்வு விஐயம் ஒன்றை மேற்கொண்டார்.

பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பார்வையிட சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ஆய்வு விஐயம்

முதல் 6 மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவைகள் 16% அதிகரிப்பு

 

6 மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவைகள் 16% அதிகரிப்பு -போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்  அமைச்சு

முதல் 6 மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவைகள் 16% அதிகரிப்பு

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சில குழுக்கள் முயற்சிக்கின்றன. பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஆளாகமல் அமைதியாக செயற்படுங்கள் - அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ 

வடக்கின் மற்றும் கிழக்கின் சில அரசியல் கட்சிகள் மக்களை வழிகெடுத்து, அவர்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தி, தமது குறுகிய அரசியல் நோக்கங்களை ஈடுசெய்வதற்காக செயற்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

 

 

நாடு முழுவதும் காணப்படும் இராணுவ முகாம்களை மீள அமைக்கும் திட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதன்படி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தையான் கட்டு சிவ நகரில் அமைந்துள்ள பன்னிரண்டாவது சிங்க ரஜிமேந்து அணி அமைந்துள்ள முகாமை மீள அமைக்கும் திட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

 

இந்த இராணுவ முகாம்களுக்குள் அனுமதி இன்றிய ஐந்து நபர்கள் உள்நுழைந்ததாகவும், அந்த நபர்களை திருப்பி அனுப்புவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்த நபர்களை திருப்பி அனுப்பும்போது ஒருவர் மாத்திரம் முல்லைத்தீவு, முத்தையான்கட்டு வாவியில் பாய்ந்து இறந்தார்.

 

வாவியில் மூழ்கி மரணம் அடைந்த அந்த நபருக்கு ஏதேனும் தாக்குதல் நடந்துள்ளதாக சில சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், அதன்படி ஒரு படைவீரர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் மேலும் இரண்டு வீர படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

அதன்படி குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது படை வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் சிவில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி சில அரசியல் குழுக்கள் இலாபம் பெறுவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சில குழுக்கள் முயற்சிக்கின்றன. பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஆளாகமல் அமைதியாக செயற்படுங்கள் - அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ 

நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

 
அரசியலமைப்பின் 79வது பிரிவுக்கு அமைய நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் அண்மையில் (15) சான்றுரைப்படுத்தினார்.
 
இந்த நாணய மாற்றுண்டியர்கள் (திருத்த) சட்டமூலம் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
 
இதற்கு அமைய நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமாக அமுலுக்கு வருவதுடன், இதன்மூலம் 82வது அத்தியாயமான நாணய மாற்றுண்டியல்கள் (கட்டளைச்) சட்டத்தை நவீனமயப்படுத்தி, சமகால வங்கி நடைமுறைகளுக்கு ஏற்றவாறாக மாற்றுவது பிரதான நோக்கமாகும்.
 
இந்தச் சட்டத்தின் மூலம் மோசடியான மற்றும் பிழையான காசோலைகளை வழங்குபவர்கள் தொடர்பில் குற்றவியல் பொறுப்பைச் சுமத்த முடியும். அத்துடன், அன்றாட வணிக நடவடிக்கைகளின் போது சட்டத்திற்கு அமைய நாணய மாற்றுச்சீட்டுக்களைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதுடன், காசோலைகளை மின்னணு முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்கின்றது.
 
இந்தத் திருத்தத்தின் பிரதான அம்சங்களில் தற்போதைய காலத்திற்குப் பொருந்தக்கூடிய வகையில் சட்டப்படியான வீதத்திற்கிணங்க ஓர் உண்டியலின் மீதான வட்டியைக் கணக்கிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், தொலைநகல் கடத்துகை அல்லது வேறு இலத்திரனியல் வழிவகைகள் மூலம் மதிப்பளிக்காமை பற்றிய அறிவித்தலைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், காலங்கடந்த செயல்முறைகளை நீக்குவதும் தற்போதைய வரைதல் செயல்முறைகளுக்கு இணங்கவாகச் செய்தல் என்பனவும் அடங்குகின்றன.
 
கொடுப்பனவுக்கான காசோலையொன்றின் உருவத்தைத் தொலைநகல் கடத்துகை அல்லது வேறு வழிவகைகள்மூலம் பணஞ்செலுத்தும் வங்கிக்கு வங்கியாளர் கடத்துவதனை இயலச்செய்தல், ஒரு காசோலையின் இருபக்கங்களிலும் ஒரு காசோலைக்குக் குறுக்குக் கோடிடும் செயல்முறையை நியதிச்சட்டமுறையாக ஏற்றங்கீகரித்தல், “மட்டும்” என்ற சொல்லுடனோ அல்லது அதுவின்றியோ “கணக்குவைத்திருப்பவருக்கு” என்ற குறுக்குக்கோடிடுதலுக்கு நியதிச்சட்டமுறையான ஏற்றங்கீகாரம் வழங்குதல், வங்கியாளர்களுக்குப் பணஞ்செலுத்துவதற்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் குறித்தசில காசோலைகளுக்கு மதிப்பளிக்காமை தொடர்பில் தண்டங்களுக்கும் வேறு விளைவாந்தன்மையினவான கருமங்களுக்கும் ஏற்பாடுகளைச் செய்தல் என்பனவும் இத்திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளன.
நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்